Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை விபரம்

சக்தி தலங்களில் முதன்மையானது, பிரசித்தி பெற்ற தலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடனை காணிக்கை உண்டியல்களில் செலுத்தி விட்டு செல்வார்கள்.

அப்படி கடந்த 14 நாட்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் சமூக ஆர்வலர்கள் கோவில் மண்டபத்தில் எண்ணப்பட்டது.

இதில் ரூ 1 கோடியே 19 லட்சத்து 66 ஆயிரத்து 946 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 110 கிராம் தங்கமும், 2 கிலோ 696 கிராம் வெள்ளியும், அயல் நாட்டு நோட்டுகள் 132ம், அயல் நாட்டு நாணயங்கள் 648ம் காணிக்கையாக பெறப்பட்டது என கோவில் இணையானையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *