Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சாலை, சாக்கடை வசதி இல்லாததால் மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் ஆமை விடும் போராட்டம்!!

Advertisement

திருச்சி பொன்மலை கோட்டம் மேலகல்கண்டார் கோட்டை பகுதிக்கு உட்பட்ட 30வது வார்டில் விவேகானந்தர் நகர், மூகாம்பிகை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையை சீரமைப்பு, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் மாநகராட்சியிடம் பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

Advertisement

மேலும் மாநகராட்சியின் அலட்சிய போக்கை கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து மேலகல்கண்டார் கோட்டை மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் ஆமை விடும் போராட்டம் நடத்தினர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தி ஆமையை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் மாநகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 மேலும், அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தராவிட்டால் அடுத்த கட்ட போராட்டமாக மாநகராட்சி அலுவலகத்தில் பன்றி விட்டு போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *