Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

டாக்டர்.சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

மாற்று கட்சியிலிருந்து விலகி  எடப்பாடியார் தலைமை ஏற்று முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் 30க்கு மேற்பட்டோர் அண்ணாதிமுகவில் இணைந்தனர் 

புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கறம்பக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தங்க குபேந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் பேரில் அமமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சியிலிருந்து 30க்கு மேற்பட்டோர் விலகி அண்ணா திமுகவில் இணைந்தனர் 

புதிதாக இணைந்த அனைவரையும் வேட்டி அணிவித்து முன்னாள் அமைச்சர் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் வரவேற்றார், அமுமுக கறம்பக்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ்குமார், ஆறுமுகம், ரமேஷ் பன்னீர், முருகேசன், தானீஸ்லாஸ், பாஸ்கரன், பழனிவேல், ராஜசேகர், தமிழரசன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 30 க்கு மேற்பட்டோர் அண்ணா திமுகவில் இணைந்தனர்

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் கருப்பையா, கறம்பக்குடி மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் முத்துக்குமார் , திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *