Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்டம்- வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் செயலாக்கம் குறித்து அரசுத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு மின் பகிர்மான கழக மேலாண்மை இயக்குனர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆல்பிஜான்வர்கீஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் அவர்கள்

 முன்னிலையில் இன்று (13.06.2025 )மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வேளாண்மை துறை ஊரக வளர்ச்சித்துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பள்ளி கல்வித்துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள்

 கலைஞரின் அனைத்து திட்டப்பணிகள் குறித்தும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் செயல்படுத்தப்படும் குடிநீர் வினியோகம் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளான்வளர்ச்சி திட்டம் சமத்துவபுரம் சீரமைப்பு மற்றும் ம உருவாக்க திட்டப்பணிகள் குறித்தும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் செயல்படுத்தப்படும் குடிநீர் விநியோகம் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும் இணைய வழி பட்டா மாற்றுதல் இணையவழிச் சான்றிதழ் வழங்குதல்

தொடர்பான பணிகளில் முன்னேற்றம் குறித்தும் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் முதல்வரின் முகவரி மக்களின் முதல்வர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் உள்ள திட்டங்கள் செயல்பாடு குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மேலும் பள்ளி உட்கட்ட அமைப்புகள்  மேம்படுத்துதல் தொடர்பான பணிகள் முன்னேற்றம் குறித்தும், முதலமைச்சர் கிராம சாலைகள் புற்றுநோய் பரிசோதனை மற்றும் நீரழிவு நோயால் கால்கள் பாதுகாக்கப்பட பாதம் பாதுகாப்போம் உள்ளிட்ட திட்ட செயல்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு மின் பகிர்மான கழக மேலாண்மை இயக்குனர் திருச்சிராப்பள்ளி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்களால் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

தென்மேற்கு பருவமழை காலங்களில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், ஆய்வு மேற்கொண்டனர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட பஞ்சப்பூர்  ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பிராட்டியூர் பகுதியில் அரசு புறம்போக்கு வண்டி பாதை நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டி குடியிருந்து வரும் வீடுகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் அவர்கள் உதவி ஆட்சியர் டிபி சனு அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி திட்ட இயக்குனர் சுரேஷ் அரசுத்துறை உயர் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *