Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வழிப்பறி செய்து அரிவாளை காட்டி போலீசை மிரட்டி தப்பிய சம்பவத்தால் பரபரப்பு

திருச்சியில் 4 1/2 பவுன் வழிப்பறி செய்தவர்களை வழியில் மடக்கிப் பிடித்த போலீஸ் -அரிவாளை காட்டி மிரட்டி தப்பிய சம்பவம்-திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில் மின்சார வாரிய ஒப்பந்த பெண் ஊழியரிடம் ( 4 1/2 ) நாலரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி பைக்கில் வந்தவர்களில் ஒருவனை அரியமங்கலம் போலீசார் வாகன சோதனையில் பிடித்தநிலையில் மற்றொருவன் போலீசாரிடம் அரிவாளை காட்டி மிரட்டி தப்பி ஓடிய சம்பவம் 

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை காமாட்சியம்மன் நகரை சேர்ந்தவர் மதியழகன் இவரது மனைவி கலா (35) இவர் திருச்சி மன்னார்புரம் மின்சார வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று பணி முடிந்து மாலை துவாக்குடியில் பஸ்ஸில் இருந்து இறங்கி அங்கிருந்து சைக்கிளில் வாழவந்தான் கோட்டைக்கு சென்ற பொழுது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கலாவை கீழே தள்ளிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த நாலரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் காயமடைந்த கலா கூச்சலிட்டும் அவர்களை பிடிக்க முடியவில்லை.இந்நிலையில் சங்கிலியை அறுத்தவர்கள் தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தப்பிச் சென்றுள்ளனர்.காட்டூர் ஆயில் மில் செக்போஸ்டில் அரியமங்கலம் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். எதேச்சையாக அவர்களது இருசக்கர வாகனத்தை மறித்த பொழுது இருசக்கர வாகனத்தை ஒட்டிய வாலிபர் திடீரென அருவாளை எடுத்து போலீசாரை மிரட்டி வாகனத்தை விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான். பின்னால் அமர்ந்திருந்தவனை அரியமங்கலம் போலீசார் பிடித்துள்ளனர்.

 பின்னர் அவரிடம் விசாரணை செய்த பொழுது கரூர் மாவட்டம் வெங்கமேடு கண்ணதாசன் தெருவை சேர்ந்த செந்தில் குமார் மகன் மோகன் பாபு (24) என்றும் அவனுடன் வந்தவன் கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் சங்கர் (25)என்பதும் இவர்கள் இருவரும் வாழவந்தான் கோட்டையில் வழிப்பறி செய்துவிட்டு தப்பி வரும் பொழுது போலீசார் வாகன சோதனையில் மோகன் பாபு கைது செய்யப்பட்டுள்ளான்.

 அவனிடம் அரியமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.செயின் பறிப்பு நடந்த இடம் துவாக்குடி காவல் நிலையம் என்பதால் துவாக்குடி போலீசார் மோகன் பாபுவை விசாரணைக்காக அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.மேலும் தப்பி ஓடிய சங்கரை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *