Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குதிருச்சி மதுரை ரோடு கீழ நாகமங்கலத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் திடீரென்று மண்ணெண்ணையை  உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து விசாரணை

நடத்தினர் அப்பொழுது அவர் தான் மட்டும் தனியாக வசித்து வருவதாகவும் தனது வீட்டுக்கு முறையாக வீட்டு வரி தண்ணீர் வரி மின் கட்டணம் கட்டி வரும் நிலையில் பட்டா வழங்காமல் கிராம நிர்வாக அலுவலர் 2000 பணம் லஞ்சம் கேட்கிறார் என்று மனம் உடைந்து தீக்குளிக்க முயற்சி செய்தேன் என்று கூறினார்.

இதையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி மனு கொடுக்க வைத்து விட்டு அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *