Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

முசிறியில் கத்திக்குத்தில் ஒருவர் பலி

திருச்சி மாவட்டம், முசிறி திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52)என்பவர் முசிறியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி கணேசன் (32) என்பவர் குடிபோதையில் வீண் தகராறு செய்துள்ளார்.இதுகுறித்து சுப்பிரமணியன் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி

உள்ளனர்.அதன் பிறகு சுப்பிரமணியன் தனது நண்பர்தர்மலிங்கம் என்பவருடன் சாப்பிடச் சென்றுள்ளார்.திரும்பி வரும்போது திருமுருகன் நகர் பஸ் ஸ்டாப் அருகே காத்திருந்த கணேசன் சுப்ரமணியனை வழிமறித்து கத்தியால் 

 இரவு குத்தியுள்ளார்.இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியன் முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர்மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார்

முசிறி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து கணேசனை கைது செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *