Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி- ஜீயபுரம் சாலையில் வருவாய் கோட்டாட்சியர் சாலை விபத்தில் மரணம்

திருச்சி ஜீயபுரம் அருகே முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுததேவசேனா சாலை விபத்தில் மரணம். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மை நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் கூட்டத்திற்கு சென்ற பொழுது

இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அவர் பயணம் செய்த அரசு வாகனம் ஜீப் டயர் வெடித்தது ஓட்டுனரால் கட்டுப்படுத்த முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள ஜேசிபி வாகனம் மீது மோதி ஜீப் முழுவதும் உருகுலைந்து விபத்தில் சிக்கியது.

விபத்தில் சிக்கிய வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்தில் மரணம் அடைந்த வருவாய் கோட்டாட்சியர் சொந்த ஊர் புதுக்கோட்டை. இவரது கணவரும் மருத்துவமனையில் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையில் உள்ளார்.

 

அவரை காண்பதற்காக மருத்துவமனைக்கு இவர் அடிக்கடி சென்று வருவார். இதற்கு முன்னதாக திருச்சி டவுனில் நில கையகப்படுத்தும் பிரிவில் பணிபுரிந்து வந்தார் பிறகு சில ஆண்டுகள் தாசில்தாராக பணிபுரிந்து வந்தார்.கடந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு ஒன்பதாவது மாதம் முதல் தற்பொழுது வரை முத்திரை வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

 இவர் மாவட்ட வருவாய் அதிகாரியாக உயர்வு பெறும் பட்டியலில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *