Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் வீட்டு வேலை செய்வது தொடர்பாக கணவன் மனைவி சண்டையில் கணவன் திட்டியதால் விஷம் கொடுத்து பச்சிளம் குழந்தை சாவு! தாயார் கவலைக்கிடம்!!

No image available

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஒ.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் கணவன் மனைவி சண்டையில் கோபித்துக்கொண்டு பச்சிளம் குழந்தையும் தாயாரும் விஷம் சாப்பிட்டதில் குழந்தை பரிதாபமாக இறந்தது.

துறையூர் அருகே ஒக்கரை கிருஷ்ணாபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். கார் டிரைவர். அவரது மனைவி நித்யா (26). தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு மாதமேயான தாவன்யா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலையில் வீட்டுவேலை செய்வதில் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கணவன் திட்டியதால் ஆத்திரமடைந்த நித்யா தனது ஒரு மாத குழந்தை தாவன்யாவுக்கு எலி பேஸ்ட் கொடுத்துவிட்டு தானும் உட்கொண்டார். இதை அறிந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே குழந்தை இறந்தது. முதல் சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக நித்யா திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *