Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் விநியோகம் – சோதனை முறை தொடக்கம்

No image available

திருச்சி மாநகராட்சி 24×7 குடிநீர் விநியோக திட்டம் சோதனை முறையில் தொடங்கி உள்ளது.

இதற்காக முக்கிய பணிகள் மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும்   முடிவடைந்துள்ளது.  இப்பணிகள் நிறைவடைந்ததன் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கும். 

உயரமான பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் வருவது போன்ற பிரச்சனைகள் இனி இருக்காது. இந்த திட்டத்தின் மூலம் இனி 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும். மேலும், அவரவர் பயன்படுத்தும் தண்ணீருக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். 

பாலயம் பஜார் பகுதியில் வால்வு பொருத்தும் பணி முடிந்துவிட்டது. தில்லை நகரில் உள்ள வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் இழப்புகளை குறைத்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். அனைத்து குழாய் மற்றும் வால்வு வேலைகளும் முடிவடைந்த நிலையில், விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படலாம்” என்றார்.

இத்திட்டத்தின் செயல்பாடுகள் அனைத்தும்  மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் (ICCC) இருந்து கண்காணிக்கப்படும். SCADA தொழில்நுட்ப வசதி மூலம்   எங்காவது குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறதா என்பதையும் கண்டுபிடிக்கலாம்.

 இனி யார் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகிறார்களோ, அதற்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் மக்கள் தண்ணீரை வீணாக்காமல் கவனமாக பயன்படுத்துவார்கள்.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *