Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் ட்ரோன் பறப்புக்கு தடை

திருச்சி, செப்டம்பர் 16 தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை (17.09.2025) திருச்சிக்கு வருகை தருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகள் ட்ரோன் பறக்க தடை செய்யப்பட்ட “நோ-ஃப்லை மண்டலம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி. ந. காமினி, ஐ.பி.எஸ். அவர்கள் வெளியிட்ட உத்தரவில், 2021ஆம் ஆண்டின் ட்ரோன் விதிகளின் பிரிவு 24(2) ன் கீழ், செப்டம்பர் 17 காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை திருச்சி மாநகரில் ட்ரோன் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட முக்கிய இடங்கள்:

கேண்டோன்மென்ட் – TVS டோல்கேட், சர்க்யூட் ஹவுஸ், செங்குளம் காலனி, மன்னார்புரம், அரிஸ்டோ ரவுண்டானா, எம்ஜிஆர் சிலை, சோனா தியேட்டர்

எடமலைப்பட்டி புதூர் – பனஜப்பூர், க்ராஃபோர்ட், மன்னார்புரம், கிணி நகர்.

திருச்சி விமானநிலையம் – புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை, கம்பியில்லா சாலை, மொரைஸ் நகரம், திருவானைக்கோயில்.

கே.கே.நகர் – சுப்பரமணியபுரம், மத்திய சிறைச்சாலை, எல்ஐசி காலனி, பெரியார் ஆர்ச்.

கோல்டன்ராக், அரியமங்கலம், காந்தி மார்க்கெட், தில்லைநகர், வாரியூர், கோட்டை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகள்.

ட்ரோன் அல்லது UAV / RPAS பயன்படுத்துவோர் இத்தடை உத்தரவை முறையாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *