AITUC மேற்கு பகுதி குறத்தெரு ஆட்டோ சங்கத்தின் சார்பில் இன்று 25.09.2025 வியாழக்கிழமை தேசிய செயலாளரும் தொழிற்சங்க தலைவருமான தோழர் A.B.பரதன் அவர்களின் 101 ம் ஆண்டு பிறந்தநாள் விழா மலர் தூவி இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறத்தெரு ஆட்டோ சங்க கிளைச் செயலாளர் ராஜா தலைமையில் கட்சியின் மேற்கு பகுதி செயலாளர் இரா சுரேஷ் முத்துசாமி மலரஞ்சலி செலுத்தினார்.
மேலும் மேற்கு பகுதி ஆட்டோ சங்க பொறுப்பாளர் தோழர் எஸ் சத்யா, R. சீனிவாசன், P.காந்தி, ரமேஷ், ராஜாமுஹம்மது, மாரிமுத்து உள்ளிட்ட 10 கும் மேற்பட்ட ஆட்டோ சங்க தோழர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி இனிப்புகள் வழங்கினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments