Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஸ்ரீரங்கத்தில்  கோடைகால வசந்த உற்சவம் நிறைவு சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தின் போது கோடைக்கால வசந்த உற்சவம்  கொண்டாப்படுவது வழக்கம். 

அதன்படி இந்த ஆண்டு வசந்த உற்சவம் வைபவம் கடந்த 18ம் தேதி  வெகுவிமரிசையாக தொடங்கியது.9 நாட்கள் நடைபெறும்  வசந்த உற்சவதினத்தின் போது நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சக்கரத்தாழ்வார் சன்னதியனருகே உள்ள வசந்த மண்டபம் எனப்படும் நீராழி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

அதன்படி  வசந்த உற்சவத்தின்  நிறைவு விழா  9-ம்  நாளான நேற்று
ஏகவசந்தம் என்றழைக்கப்படும் தீர்த்தவாரி வெகு விமர்சியாக நடைபெற்றது.முன்னதாக நேற்று மாலை  நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு, 
நம் பெருமாள் ஆழ்வான் திருச்சுற்று வலம் வந்து சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார்.

பின்னர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளுக்கு 
திருமஞ்சனம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இரவு மூலஸ்தானம் சென்றடைந்தார். 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு நம்பெருமாளை வழிபட்டுச் செல்லும் இந்த வசந்த உற்சவம்  வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி இவ்விழா நடைபெற்று வருகிறது.

திருச்சி விஷம் செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *