Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி – சிங்கப்பூர் விமான சேவைகள் குறித்த விபரம்

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி மற்றும் சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வரும் புதிய விமான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

2025 நவம்பர் 16 முதல் 2026 மார்ச் 28 வரை அமலுக்கு வரும் இவ்வட்டவணையின் படி ஸ்கூட் (Scoot), இந்திகோ (IndiGo) மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) நிறுவனங்கள் திருச்சி–சிங்கப்பூர் இடையே வாரத்தின் பல நாள்களில் விமான சேவைகளை இயக்க உள்ளன.

திருச்சியிலிருந்து சிங்கப்பூர் நோக்கி தினமும் அதிகாலை முதல் மாலை வரை 6 விமானங்கள், அதேபோல் சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு தினமும் 6 விமானங்கள் புறப்படும்.

பயணிகள் தேவைக்கு ஏற்ப வசதியான நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுவதால், இரு நகரங்களுக்கும் இடையிலான பயண வசதி மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *