திருச்சி மன்னார்புரம் பகுதியில் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன், குடும்ப தலைவியாக வாழ்ந்துவருபவர் கலைவாணி. இவருக்கு, திருச்சி சிம்கோ மீட்டர் காலனியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் வங்கி சேமிப்பு கணக்கு உள்ளது. அந்த கணக்கை வங்கி அதிகாரிகள் திடிரென முடக்கிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன், வங்கி கிளை அதிகாரிகளை நேரில் சந்தித்து, கலைவாணி விளக்கம் கேட்டுள்ளார்.
அரசுக்கு சரக்கு மற்றும் சேவை வரியாக (GST) 9 கோடியே 48 லட்சம் ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டியுள்ளது. அந்த நிலுவை தொகையை செலுத்தியவுடன், முடக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எந்த தொழிலும் செய்யாத நான் ஏன்? GST செலுத்த வேண்டும் என்று வங்கி அதிகாரிகளை கலைவாணி கேட்டுள்ளார்.
பின்னர், வங்கி அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில், மாநகர காவல் ஆணையர் நடத்தும் குறைதீர் நாள் கூட்டத்தில், காவல் ஆணையர் காமினியை நேரில் சந்தித்து, கலைவாணி இன்று புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கலைவாணியின் ஆதார் அட்டை, பான் கார்டு, புகைப்படம், அவரது கையெழுத்து மாதிரி ஆகியவற்றை பயன்படுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டி.வி.எல்-எஸ்.பி எண்டர்பிரைசஸ் என்ற போலி நிறுவனம் வர்த்தகம் செய்திருப்பதும், அவர்கள், GST நிலுவை தொகையை செலுத்தாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கலைவாணி கொடுத்துள்ள புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் உறுதி அளித்துள்ளனர். மேலும், திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச்சொல்லி வழிகாட்டியுள்ளார்.
இதனை நம்பி தனது வங்கி கணக்கில் முடக்கப்பட்டுள்ள 3ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டு கொடுக்க வேண்டுமென திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை. எனவே, கோவையில் உள்ள GST அலுவலகத்திற்கு சென்று முறையிடவும் என போலீஸார் தெரிவித்துவிட்டனர். இதனால், கண்ணீருடன் கலைவாணி காவல் நிலையத்தில் இருந்து வெளியேறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments