இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2026 -ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என்பதையும், தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்யும் பொருட்டு, திருச்சிராப்பள்ளி (மேற்கு) சட்டமன்றத் தொகுதியில் 04.11.2025 அன்று முதல் சிறப்பு தீவிரத்திருத்த பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சிறப்பு தீவிர திருத்தம், 2026 தொடர்பாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கிட்டு படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்திடும் பொருட்டு, திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 30.11.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை உதவி மையங்கள் அமைக்கப்பட்டு செயல்படவுள்ளது.

எனவே, கணக்கீட்டு படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் அனைவரும் இந்த உதவி மையங்களை பயன்படுத்தி கொண்டு, கணக்கிட்டு படிவங்களை பூர்த்தி செய்து அதனை மீள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்திடுமாறு மாநகராட்சி ஆணையர் திரு.லி. மதுபாலன் இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments