Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இளைஞரை சாலையில் ஓட விட்டு வெட்டி கொலை செய்த சம்பவம்:உயிருக்கு போராடிய பரிதாபம்

திருச்சி பட்டாபிராமன் தெருவில் காதல் விவகாரத்தில் சந்துரு என்பவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் மாருதி மருத்துவமனை அருகே உள்ள பாலன் நகரை சேர்ந்த சந்துரு.இவரின் காதல் விவகாரத்தில்
மூன்று பேர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலையில் நின்று கொண்டிருந்த சந்துருவை 3 பேர் ஓட ஓட வெட்டி கொலை செய்தனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல் துறையினர் பிடித்து வைத்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.


வெட்டுப்பட்ட சந்துரு உயிருக்கு போராடிய மனதை பதபதைக்கும்
காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அருகில் நிற்கும் பொதுமக்கள் ஆம்புலன்ஸ் அழைக்கும் காட்சிகளும் குரலும் பதிவாகியுள்ளது.

கொலை சம்பவத்தை நிகழ்த்தியவர்களை பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் காதல் விவகாரத்தில் ஒருவர் ஓட ஓட விரட்டி விரட்டி படுகொலை செய்யப்பட்டது பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.


போலீசார் நடத்திய விசாரணையில் பாலன் நகரை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் சந்துருவின் தங்கையை அதே பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி என்ற இளைஞர் காதலித்துவந்ததற்கு சந்துருவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், உழவர் சந்தையில் வலிப்பு காரணமாக கடந்த ஆண்டு பால்பாண்டி இறந்துவிட, அண்ணன் மரணத்திற்கு காரணம்

சந்துரு தான் என்றும் சந்துருவை கொலை செய்துவிடுவதாக பால்பாண்டியன் தம்பி ராஜலிங்கம் சபதம்விடுத்த நிலையில், அண்ணன் இழப்புக்கு பழிதீர்க்கும் விதமாக தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு தீர்த்துகட்டியது தெரியவந்தது. ஆனஸ்ட்ராஜை போலீசார் கைதுசெய்தநிலையில், தப்பியோடிய எஞ்சிய இருவரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *