திருச்சி மாவட்டம் திருச்சிராப்பள்ளி வனக்கோட்டம்,திருச்சிராப்பள்ளி வனச்சரகம் எம். ஆர்.பாளையம் காப்புக்காட்டில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில், பராமரிக்கப்பட்டு வருகின்ற, யானைகளுக்கு நீர்

தெளிப்பான், சேற்று குளியல், பாத குளியல், நீச்சல் குளம், நடை பயிற்சி, குளியல் தொட்டி போன்ற வசதிகள் செய்ய பட்டுள்ளது.தற்போது புதியதாக வயது முதிர்ந்த யானைகளுக்கு பிரத்யேகமாக நீர் சிகிச்சை முறை (HYDRO THERAPHY), யானைகளுக்கு சிகிக்சை அளிப்பதற்கு கிரால் அமைப்புடன் கூடிய சிகிச்சை கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யானைகளின் உடல் மற்றும் மன நலம் மேம்பாட்டிற்கு புதியதாக
விளையாட்டுப் பொருட்களுடன் கூடிய புல் தரைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது, இன்று (16.01.2026) யானை பொங்கல் தினத்தை முன்னிட்டு,திருச்சிராப்பள்ளி மண்டல வன பாதுகாவலர், திருமதி R. காஞ்சனா இ.வ.ப அவர்களின்

தலைமையில், யானைகளுக்கு பொங்கல் இட்டு, சுண்டல், பழங்கள், காய்கறிகள், கிழங்குகள், கீரைகள் மற்றும் கரும்புகள் உள்ளிட்டவற்றை கொடுத்து, யானைகள் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட வன அலுவலர் திருமதி. S. கிருத்திகா இ.வ.ப, உதவி வன பாதுகாவலர் காதர் பாஷா, வனச்சரக அலுவலர் V. P. சுப்பிரமணியம்,யானைகள் மறுவாழ்வு மைய வன கால்நடை உதவி மருத்துவர் மற்றும் திருச்சி வன சரக வனப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments