Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சாலை பாதுகாப்பு மாதம்: பொதுமக்களிடம் விழிப்புணர்வு பேரணி

திருச்சி மாநகரத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும், தலைக்கவசம் (Helmet) அணிவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று 20.01.2026-ந்தேதி அமர்வு நீதிமன்ற காவல்நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து இருந்து விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

மேற்கண்ட விழிப்புணர்வு பேரணியானது MGR சிலை அருகில் தொடங்கி, கோர்ட் ரவுண்டானா, முத்திரையர் சிலை, தலைமை தபால்நிலையத்தில் பேரணி நிறைவு பெற்றது.

மேற்கண்ட விழிப்புணர்வு பேரணியில் காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் விழிப்புணர்வு பேரணியில் மாணவ மாணவிகள் மொத்தம் 1200 நபர்கள் சாலை பாதுகாப்பு குறித்து வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியும் கலந்து கொண்டார்கள்.

மேலும் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பாக பொது மக்கள் கூடுமிடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு அவர்களது பள்ளி கல்லூரிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துதல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *