Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு: திருச்சி வாலிபருக்கு 20 ஆண்டு சிறை மற்றும் ₹25,000 அபராதம்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜா (27), த.பெ. பெரியசாமி என்பவர், கடந்த 10.09.2021 அன்று 17 வயது சிறுமி ஒருவரது வீட்டிற்குச் சென்று, அவரை பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கானது 30/22, U/s 5(j)(ii), 6(1) of POCSO Act-2012 பிரிவுகளின் கீழ் 28.07.2022 அன்று பதிவு செய்யப்பட்டது.
எதிரி ராஜா 01.08.2022 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞர் செல்வி. சுமதி ஆஜராகி வாதிட்டார்.
(20.01.2026), திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி. சண்முகபிரியா அவர்கள், குற்றவாளி ராஜாவுக்கு 20 ஆண்டு கால சிறை தண்டனையும், ரூபாய் 25,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளைச் சரிவர கவனித்த லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய நீதிமன்ற காவலர் திருமதி. திவ்யா என்பவரை, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இகாய அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *