Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பள்ளி மாணவர்களுக்கு இயற்கை முகாம்!

இன்று 23.01.2026 திருச்சி மாவட்டம், மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் 8 முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் ஐந்து பள்ளிகளைச் (அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளூர், அரசு மேல்நிலைப்பள்ளி வாளாடி, அரசு மேல்நிலைப்பள்ளி அமூர், அரசு மேல்நிலைப்பள்ளி சிறுகாம்பூர், பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீரங்கம்) சேர்ந்த 50 மாணவர்களுக்கு ஒருநாள் இயற்கை முகாம் டாக்டர். இரா.காஞ்சனா இவய,

வனப்பாதுகாவலர் திருச்சி அவர்களின் அறிவுரையின்படியும். திருமதி சீ.கிருத்திகா இவய மாவட்ட வன அலுவலர் திருச்சி மற்றும் திரு 1 காதர் பாட்ஷா உதவி வனப்பாதுகாவலர் அவர்களின் ஆலோசனையின் படி நடைபெற்றது. இந்த முகாம் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரியல் பல்வகைமை, காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை வளங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.

Dr. முத்துசாமி பி.எச்.டி பறவையியல்) திருச்சி அவர்கள் பறவைகள் சூழலியல் அமைப்பில் வகிக்கும் முக்கிய பங்கு. அவற்றின் சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் வெளிப்புற களப் பயிற்சியில் பறவைகளை அடையாளம் காணும் முறைகள் குறித்து விளக்கினார். இதன் மூலம் மாணவர்களிடையே பறவை பார்வை மற்றும் பறவை பாதுகாப்பு குறித்த ஆர்வம் அதிகரித்தது. தொடர்ந்து ஜெ. ரவி வனச்சரக அலுவலர் அவர்கள் காடுகள் மற்றும் வனவிலங்குகள் சூழலியல் சமநிலையை பேணுவதில் வகிக்கும் பங்கு, உயிரினங்களின் பரஸ்பர சார்பு, உயிரியல் பல்வகைமைக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

பின்னர் திரு பாலகிருஷ்ணன் பசுமைத் தோழர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருச்சி அவர்கள் பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழல் மற்றும் மனித உடல்நலத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விளக்கி, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பது, மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் சரியான கழிவு மேலாண்மை முறைகள் குறித்து செய்முறை விளக்கங்கள் வழங்கினார். மாணவர்களின் அன்றாட வாழ்க்கையில் சுற்றுச்சூழல் நட்பு பழக்கங்களை கடைப்பிடிக்க ஊக்குவிக்கும் வகையில் செயல்பாடுகளும்

நடத்தப்பட்டன.மாணவர்களுக்காக காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு தொடர்பான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் வனவர்கள் திருமதி கோகிலா மற்றும் திரு விக்னேஷ் ஆகியோர் நாற்றங்கால் பராமரிப்பு முறைகள் மற்றும் மரக்கன்றுகள் நடுவதின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர் பின் வண்ணத்துப்பூச்சி பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து காணொளி மூலம் விளக்கமளிக்கப்பட்டு, வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை நிலைகள் நேரடியாக காட்டப்பட்டன. மேலும் மாணவர்கள் உயிருள்ள முதிர்ந்த பட்டாம்பூச்சிகளை இயற்கையில் விடுவிப்பதில் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பள்ளிக் கல்வித்துறை. திருச்சி மாவட்டத்தின் ஒத்துழைப்புடன் இந்த ஒருநாள் இயற்கை முகாம் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வையும் இயற்கை மீது உள்ள ஆர்வத்தையும் வளர்த்ததில் முக்கிய பங்காற்றியது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *