திருச்சி உறையூர் பகுதியின் காவல் தெய்வமான அருள்மிகு குழுந்தலாயி அம்மன் மற்றும் பிரசித்தி பெற்ற குட்டிகுடித்தல் திருவிழா குறித்த புத்தகமான “குட்டிகுடித்தல் குழுந்தலாயி அம்மன் வரலாறு” எனும் நூல் கடந்த 6.2.2026 (வெள்ளி) அன்று வெளியீடு செய்யப்பட்டது.
எழுத்தாளர் ஹரிஷ் பிரபாகரன் எழுதிய இந்நூல் வெளியீடு திருச்சி தில்லை நகர் 7ஆவது குறுக்கு சந்தில் உள்ள அருள்மிகு செங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் எம்.ஜெ. பப்ளிக்கேஷன்ஸ் ஹவுஸ் உரிமையாளர் கௌரா ஜெய்கணேஷ் அவர்கள், கோவில் நிர்வாகத்தினர், ஊர் முக்கியஸ்தர்கள், விழாகுழுவினர், பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments