Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்செரிதல் விழா தொடங்கியது – திருக்கோவில் நிர்வாகம் சார்பில் பூக்கள் சாற்றி வழிபாடு

பக்தர்களின் நலனுக்காக 28 நாள் பச்சைப் பட்டினி விரதம் மேற்கொள்ளும் சமயபுரம் மாரியம்மன்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப்பெற்ற ஸ்தலமாகும்.

இங்கு அம்மன் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரகங்களை நவசர்பங்களாக திருமேனியில் தரிசித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம்செய்வதன்மூலம் நவக்கிரகதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இக்கோயிலில் நடைபெறும் சிறப்பாக விழாக்களில் பூச்செரிதல் விழாவும் ஒன்றாகும். உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நலனுக்காகவும் சமயபுரம் மாரியம்மனே பச்சை பட்டினி விரதம் இருப்பது வேறு எந்தகோவிலிலும் இல்லாத தனிச்சிறப்பு…

அதன்படி, சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்ட விழாவினை முன்னிட்டு பூச்செரிதல் விழா துவங்கியது.

இன்றையதினம் முதலாவதாக கோயில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் சூரிய நாராயணன் தலைமையில் திருக்கோயில் பணியாளர்கள், அறங்காவலர்கள் மற்றும் கிராமபொதுமக்கள் கூடைகூடையாக பூக்களை ஊர்வலமாக எடுத்து கோவிலை வலம்வந்து பின்னர் அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

மாசிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி, பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் பூச்செரிதல் விழா நடைபெறும்.

மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம்செய்த பாவம் நீங்கவும், உலகநன்மைக்காவும், தன்னை தரிசிக்கவரும் பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும், தீவினைகளும் அனுகாது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க மரபுமாறி, அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சைபட்டினி விரதத்தினை வருடந்தோறும் மேற்கொள்வது வேறு எந்த கோவில்களிலும் இல்லாத ஒருதனிச்சிறப்பு ஆகும்.

நடப்பாண்டு, 8ம் தேதி இன்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி பூஜை முடிந்து சமயபுரம்மாரியம்மனுக்கு காப்புகட்டுதல் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல்வார பூச்செரிதல் விழாவில், கோயில் நிர்வாகம் சார்பில் கோயிலின் இணை ஆணையர் சூரிய நாராயணன் தலைமையில் பூக்களை கொண்டுவந்த கோயில் பணியாளர்கள், பக்தர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பூக்களை கூடைகளில் தலையில் சுமந்தும், கையில் ஏந்திவந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்வேறு வாகனங்களிலிருந்து அம்மனுக்கு இன்று முதல் நாளை திங்கள்கிழமை மதியம் 12:00 மணி வரை கொண்டு வரவுள்ளனர்.

இதேபோன்று வரும் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் சமயபுரம் பூச்சொரிதல் விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதருவார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *