Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்டாலின் தான் தனித்து விடப்பட்டுள்ளார்! – திருச்சியில் அமைச்சர் ரமேஷ் பேட்டி

மாமன்னர் தீரன் சின்னமலையின் 212வது நினைவு தினத்தையொட்டி திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் உள்ள தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் நவல்பட்டு விஜி, தினேஷ், கதிரவன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து அறநிலைதுறை அமைச்சர் ரமேஷ்

இந்தியா முழுவதும் உள்ள தலைவர்கள் பாராட்டும் வகையில் ஆட்சியில் நடத்தி வருகிறார். வரலாற்றிலேயே மிகுந்த மாற்றத்தை உருவாக்கி வருகிறார்.
மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து இன்று வாக்களிக்காதவர்கள் கூட மகிழ்ந்திருக்கு படியான நம்முடைய முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார்.

முதல்வர் விஜய் தனித்து விடப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு

யார் தனித்து விடப்பட்டுள்ளார் என மைக்கை நீட்டி கேட்டால் தெரியும். முன்னாள் சட்டமன்றத்தில் இருந்து பேசிக் கொண்டிருந்த ஸ்டாலின் இன்று சட்டமன்ற நிகழ்வுகளை வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கும் வகையில் தனித்து விடப்பட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை அது மக்களுக்கு தெரியும்.

மேகதாது பிரச்சனை குறித்து முதல்வர் பேசவில்லை எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் நடத்த ஏன் தாமதம் என்ற கேள்விக்கு

எல்லா விஷயத்தையும் பேசி செய்ய வேண்டிய அவசியமில்லை செயலில் காட்டினாலே போதும்.
எங்கள் முதல்வர் செயலில் காட்டக்கூடிய முதல்வர்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவரிடம் சுவாமி தரிசனத்திற்காக 2000 ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு

 

எல்லா கோயில்களுக்கும் இது போல் நடந்து வருகிறது என்று சதவீதம் இதை சரி செய்து வருகிறோம்.
எனக்கும் தகவல் வந்து கொண்டிருக்கிறது அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
விசாரணை முடிவில் நிரூபிக்கப்பட்டால் உரிய
நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த பாராபட்சமும் பார்க்கப்படாது.

இடைத்தேர்தலுக்காக பெரியோடு காத்திருப்பதாக சீமான் கூறியிருக்கிறார் என்ற கேள்விக்கு .

அவரும் 15 வருடமாக பயிற்சி பணிகள் என்று கூறி இன்னும் பயிற்சி செய்து கொண்டே இருக்கிறார்.
இதுபோன்று வெறுப்பு அரசியலை விதைப்பது தலைவருக்கு எதிராக பேசுவதை விட்டுவிட்டு உண்மையிலேயே வெற்றி பெறுவதற்கான நோக்கத்தோடு செயல்பட்டு வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஏதாவது இடம் பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ளது என அவரை கேட்டுக்கொள்கிறேன்.

விவசாய சங்கங்களில் பேசி நிறைய கோரிக்கைகளை வழங்கியுள்ளனர் அது சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொடுத்துள்ளோம் அவர் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
கோரிக்கையை ஏற்று நடவடிக்கைகள் எடுக்கப்பார்.

நான் ஓடி ஒளியவில்லை தவெக என் மீது பொய்யானப்பா கொடுத்துள்ளது என செந்தில் பாலாஜி கூறி உள்ளாரே என்ற கேள்விக்கு

அப்படி ஓடி ஒழியவில்லை என்றால் எங்கே காணமல் போனார்கள், தைரியமாக நிற்க வேண்டியதுதானே கோர்ட் என்ன செல்வது என்று பார்க்க வேண்டியது தானே களத்தில் வந்து சந்திக்க வேண்டியது தானே இந்த ஆட்சியை பொறுத்தவரை ஊழல் செய்த யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.

அறநிலை தொடர்பான ஊழல் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு .

வெள்ளை அறிக்கை வெளியிட தொடர்பான ஆலோசனைசெய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சியில் கோயில் சொத்துக்கள் பல்வேறு இடங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதற்கான தனி தனி குழுக்கள் கூடிய விரைவில் அமைப்போம்.
கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *