Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

போலீஸ் பணியில் சேரவிருக்கும் திருச்சி திருநங்கை ரிஹானா

காவல்துறை, தீயணைப்பு, சிறைத்துறைக்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வு திருச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் ரிஹானா. 19 வயதே ஆன திருநங்கை திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 

வருகின்ற பத்தாம் தேதி நடைபெற உள்ள ஷாட்புட் மற்றும் நீளம் தாண்டுதலில் தகுதி பெற்றால் ஆயுதப்படை காவலர் ஆக பணியில் சேரும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கும். கிட்டத்தட்ட 95% தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில் ரிஹானா காவலராக தேர்ச்சி பெறுவது உறுதியாகி உள்ளது.

பல்வேறு தடைகளைத் தாண்டி காவலராக பணியில் சேர உள்ள ரிகானா நேற்று நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாவது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *