Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

3 1/2 பவுன் தங்க நகைகளை திருடிய 2 சிறுவர்கள் – போலீசில் சிக்கிய ஒரு சிறுவன் தப்பி ஓட்டம்

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று பின்னர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த மூன்றரை பவுன் நகை திருடு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து துரைராஜ் எடமலைப்பட்டிப்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் வீட்டிற்குள் சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்தது தெரியவந்தது. இதனையெடுத்து அதே பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவனை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் நகையைத் திருடி அதை ஒப்புக் கொண்டான்.

பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறி விட்டுச் சென்ற சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான் எனது போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *