திருச்சி அருகே விபத்து - ஒருவர் பலி 5 பேர் படுகாயம்

திருச்சி அருகே விபத்து - ஒருவர் பலி 5 பேர் படுகாயம்

திருச்சி சமயபுரம் மேம்பாலம் அருகே அரசு பேருந்து மோதி கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அருள் முருகன் என்பவர் தனது குடும்பத்தோடு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு காரில் வீட்டிற்கு திரும்பி சென்றுக்கொண்டிருந்தார்.

சமயபுரம் மேம்பாலம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது அரசு பேருந்து காரின் மீது மோதியது‌. இதில் நிலை தடுமாறிய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் சென்ற 6 பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேர் படுகாயமடைந்தனர். இதுக்குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision