திருச்சியில் வரும் வெள்ளிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி நகரியம் கோட்டம், ஜங்ஷன் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மார்சிங்பேட்டை பகுதியில் அரசுக்கு சொந்தமான பழுதடைந்த நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை இடிக்கும் பணியினை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மேற்கொள்ள இருப்பதால் பாதுகாப்பு கருதி மின் விநியோகத்தினை தடை செய்ய வேண்டியிருப்பதால்,
மார்சிங்பேட்டை, ஹவுசிங் யூனிட், கூனி பஜார் கூனி பஜார் மெயின்ரோடு, பள்ளி வாசல் தெரு, பகவதி அம்மன் கோவில் தெரு, சவரியார் கோவில் தெரு மற்றும் நேமத்தான் தெரு ஆகிய பகுதிகளில் 02.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 05.30 வரை மின் விநியோகம் இருக்காது என்றுசெயற்பொறியாளர்பொறிஞர். கா.முத்துராமன் தெரிவித்துள்ளார் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://www.threads.net/@trichy_vision