காங்கிரஸ் போராட்டத்தில் கடுப்பான தொண்டரை அடிக்க பாய்ந்த எம்.பி திருநாவுக்கரசர்

காங்கிரஸ் போராட்டத்தில் கடுப்பான தொண்டரை அடிக்க பாய்ந்த எம்.பி திருநாவுக்கரசர்

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பைத் தெரிவித்து திருச்சி காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சல மன்றம் முன்பு திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணியை கட்டியபடி நூதன முறையில் கண்டன அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது பேரறிவாளன் விடுதலை குறித்து கூட்டத்தில் நின்று கொண்டிருந்த சிக்கல் சண்முகம் என்ற காங்கிரஸ் கட்சி தொண்டர் திருநாவுகரசு பேசிக்கொண்டிருக்கையில் ஆவேசமாக குறுக்கிட்டு பேசினார்.

பின்னர் அந்த நபரை அமைதியாக இருக்குமாறு எம்பி கூறினார். ஆனால் அந்த காங்கிரஸ் கட்சி தொண்டர் தொடர்ந்து தனது ஆதங்கத்தை சத்தமாக வெளிப்படுத்தினார் இதில் ஆத்திரமடைந்த எம்பி3 அரசு அந்த நபரை அடிக்கப் பாய்ந்தார் பின்னர் அவரை அமைதியாக இருக்கும்படி கூறி அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

அறப்போராட்டத்தில் பொறுமையாக இருந்த எம்.பி.திருநாவுகரசரின் பொறுமையை சோதித்து அவரெ கடுப்பேற்றிய தொண்டரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO