திருச்சியில் (19.12.2021) மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் (19.12.2021) மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் & பிஷப் ஹீபர் கல்லூரி இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 19.12.2021 அன்று புத்தூர், பிஷப் ஹீபர் கல்லூரியில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை நடைபெறும் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில்

8, 10,12, ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பட்ட மேற்படிப்பு, பொறியியல் படிப்பு போன்ற கல்வித்தகுதிகளை உடைய வேலைநாடுநர்கள் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள் நகல் மற்றும் சுயவிவர குறிப்புடன் ( BIO - DATA ) இம்முகாமில் கலந்து கொள்ளலாம். 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 10,000-க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலைவாய்ப்புகள் உள்ளன.

அயல் நாட்டு வேலை வாய்ப்புக்கான பதிவு. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச பயிற்சி வகுப்புக்கான பதிவு. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பதிவு. மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்புகள்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் தனியார்துறை வேலை இணையம் (www.tnprivatejobs.tn.gov.in) தொடர்பான தகவல்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலைநாடுநர்கள் கீழ்க்கண்ட வழியாக பதிவு செய்து கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn