காசி விலங்கி மீன் மார்க்கெட்டில் மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு

காசி விலங்கி மீன் மார்க்கெட்டில் மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு

 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உறையூர் காசி விலங்கி மீன் மார்கெட்டில்  மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர்  ஆர். வைத்திநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தார்கள்.

ஆய்வின் போது மீன் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முழுமையாக அடைக்கப்பட்டு, கழிவுநீா்கள் தேங்கி நிற்பதையும் உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டார்கள். மேலும், மீன் மார்கெட்டை தினமும் தூய்மை செய்ய வேண்டும் என்றும் அதோடு மாநகராட்சி குறிப்பிட்டுள்ள எல்லைக்குள் மீன் கடைகள் செயல்பட வேண்டும் என்றும், வெளிப்புறங்களில் மீன் கடைகள் போடுவதை நிறுத்த வேண்டும் என்றும் கடைகாரா்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி நகர பொறியாளர், செயற்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO