துவரங்குறிச்சி அருகே லாரி மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு - 6 பேர் காயம்

துவரங்குறிச்சி அருகே லாரி மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு - 6 பேர் காயம்

மதுரை மாவட்டத்திலிருந்து பெரம்பலூருக்கு ஒரு சொகுசு காரில் 7 பேர் மசூதிக்கு சென்று கொண்டு இருந்த நிலையில் திருச்சி துவரங்குறிச்சி அருகே டிப்பர் லாரி தீடிரென அருகில் உள்ள ரோட்டில் திரும்ப முயற்சித்த போது பின்புறம் வந்த கார் லாரி மீது பயங்கர சத்ததுடன் மோதியது.

இதில் காரில் பயணம் செய்த 7 பேர் காயமடைடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காத அனுப்பி வைத்தனர், இதில் சிகிச்சை பலனின்றி காமில் பாட்ஷா (51) உயிரிழந்தார்.

காயம் அடைந்த 6 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn