பி.எஸ்.ஆர் டிரஸ்ட்  சார்பில் 10ஆம் ஆண்டு சிறார் தீபாவளி நிகழ்ச்சி

பி.எஸ்.ஆர் டிரஸ்ட்   சார்பில் 10ஆம் ஆண்டு சிறார் தீபாவளி நிகழ்ச்சி

திருச்சி பி.எஸ்.ஆர் டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சிறார் தீபாவளி நிகழ்ச்சி பத்தாவது ஆண்டாக திருச்சி தேசிய கல்லூரி வளாகத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது.

பி.எஸ்.ஆர் டிரஸ்ட், ஒவ்வொரு ஆண்டும் வறுமை சூழல் காரணமாக தீபாவளி கொண்டாட இயலாத குழந்தைகளை தேர்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

 அவ்வகையில் இவ்வாண்டு 275 குழந்தைகளுக்கு புத்தாடை இனிப்புகள் தீபாவளி பட்டாசு மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சருக்கு அவருடைய தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் இருக்கும் ஓவியத்தை நினைவு பரிசாக பி.எஸ்.ஆர் டிரஸ்ட் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஷேக் அப்துல்லா, நிதி அறங்காவலர் முனைவர் குணசீலன் இருவரும் இணைந்து வழங்கினர்.

தமிழ்நாடு சிறப்பு ஒலிம்பிக் செயலாளர் முனைவர் பிரசன்ன பாலாஜி, பாரதிதாசன் பல்கலைக்கழக ஆராய்ச்சி துறை தலைவர் முனைவர் முத்துசாமி, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, பிஎஸ்ஆர் அட்ரஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவிகளை வழங்கினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn