திருச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள வேலை நாடுநர்கள் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
முகாமில் தொழில்துறை,சேவை துறை, மற்றும் விற்பனை துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து இலவச திறன் பயிற்சிக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். இத்ததனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள், மற்றும் பொறியியல் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட வேலை நாடுனர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுயவிவர குறிப்பு அனைத்து கல்வி சான்றுகள், நகல்கள், ஆதார் அட்டை,பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு வேலை நாடுனர்கள் தங்கள் விரும்பும் வேலை வாய்ப்பினை பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை நாடுனர்கள் (21. 03. 2025 )அன்று வெள்ளிக்கிழமை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்திற்கு நேரில் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்திறனை நேரிலோ அல்லது0431-2413510,94990-55901,94990-55902 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை மாவட்ட ஆட்சியர் திரு.மா.பிரதீப் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision