பிரேத பரிசோதனை கிடங்கின் கதவை உடைத்து பிரேதத்தை எடுத்துச் செல்ல முயன்ற உறவினர்கள் - திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு!!

பிரேத பரிசோதனை கிடங்கின் கதவை உடைத்து பிரேதத்தை எடுத்துச் செல்ல முயன்ற உறவினர்கள் - திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு!!

Advertisement

அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கிடங்கின் கதவுகளை உடைத்து பிரேதத்தை எடுத்துச் செல்ல முயன்ற உறவினர்கள் - அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் விசாரணை.

Advertisement

திருச்சி வயலூர் சாலையில் உள்ள வாசன் நகரில் வசித்து வந்தவர் பிரபு (வயது 32), இவர் நேற்றிரவு குடிபோதையில் தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார், இதனையடுத்து அவரை அவரது உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறவே உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர்.

ஆனால் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின்னரே உடலை கொடுக்க முடியும் என்று கூறியுள்ள நிலையில் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்,பின்னர் பிரேத பரிசோதனை கிடங்கின் கதவுகளை உடைத்து பிரபுவின் உடலை எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர்.

Advertisement

அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர்கள் கந்தர்வகோட்டை சோழன் பட்டியை சேர்ந்த வீரமணி(39),பீலிக் ராஜா,கார்த்திக், பாக்கியராஜ் வைத்தீஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேரை மடக்கி பிடித்தனர் - இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

Advertisement

அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.