சமயபுரம் பூச்செரிதல் விழா - 5 கிராம மக்களிடம் ஆலோசனைக் கூட்டம்

சமயபுரம் பூச்செரிதல் விழா - 5 கிராம மக்களிடம் ஆலோசனைக் கூட்டம்

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகின்ற சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு, வருகின்ற 12ஆம் தேதி சமயபுரம் மாரியம்மனுக்கு மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் பூச்செறிதல் விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் அதிரடி நடவடிக்கையாக, சமயபுரம் மாரியம்மன் கோவில் பகுதிகளில் உள்ள கிராம முக்கியஸ்தர்களை அழைத்து வருகின்ற (12.03.2023) தேதி அன்று பூச்செரிதல் விழாவில் எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும் என்று ஐந்து கிராமமான மகாலிக்குடி, மருதூர்,

வி.துறையூர், மாடக்குடி, ஈஞ்சூர், நரசிக்குமங்கலம், செல்லாண்டி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கிராம முக்கியஸ்தர்களை அழைத்த சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன், வந்திருந்த கிராமம் முக்கியஸ்தர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn