பள்ளிக்கூடம் திறப்பதற்காக இரண்டு மணி நேரம் காத்திருக்கும் மாணவ மாணவிகள்.

பள்ளிக்கூடம் திறப்பதற்காக இரண்டு மணி நேரம் காத்திருக்கும் மாணவ  மாணவிகள்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள சோமனபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சேரிமலை புதூர் மற்றும் ஒடுவம்பட்டி ஆகிய கிராமங்கள் சோமநாதபுரம் ஊராட்சிக்கு அமர்ந்துள்ளது. சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இப்பகுதியில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியாகும்.

இப்பகுதிகளில் இருந்து சோபனாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வைரி செட்டிபாளையம் மேல்நிலைப்பள்ளி, கோட்டப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தினமும் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் இருந்து காலை மாலை என தினசரி இருமுறை மட்டுமே அரசு பேருந்து வசதி இருப்பதாக கூறப்படுகிறது.

காலை ஆறு முப்பது மணிக்கும் மாலை 6 மணிக்கு பேருந்து வந்து செல்லுவதாக இப்பகுதியில் வாழும் மலைவாழ் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சோபனாபுரம் அரசு பள்ளிக்கு செல்லும் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காலை பேருந்தில் புறப்பட்டு ஏழு மணிக்கு பள்ளிக்கு சென்றடைவதாகவும் பள்ளிக்கூடம் வழியாக கடந்து செல்லும் பேருந்து பள்ளி வளாகத்தின் அருகில் நிறுத்தப்படாமல் முன்னதாகவே ஒரு கிலோமீட்டருக்கு முன்பு இறக்கி விடப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

காலை 9:30 மணிக்கு தொடங்கும் வகுப்புகளுக்காக காலை ஏழு மணிக்கு முன்பே பள்ளி வளாகத்தை வந்தடையும் மாணவ மாணவிகள் தாங்கள் கொண்டு வரும் காலை உணவு வகைகளை பள்ளி வளாகத்திலேயே சாப்பிட்டுவிட்டு சுமார் 2 மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

இதைப்பற்றி பெற்றோர்கள் போக்குவரத்து துறையினரிடம் மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை ஏதும் இல்லை என தெரிவித்துள்ளனர். மாணவர்களின் நலன் கருதும் இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி நேரங்களில் பேருந்தை இயக்கவும், பொதுமக்கள் மருத்துவம் மற்றும் வணிகம் அலுவலக பயணம் கருதி பேருந்து நேரத்தை மாற்றி இயக்க இப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision