எனக்கு சம்பந்தமில்லாத கொலை வழக்கில் போலீசார் தீவிரமாக தேடியதால் சரண் - சாமி ரவி பேட்டி

எனக்கு சம்பந்தமில்லாத கொலை வழக்கில் போலீசார் தீவிரமாக தேடியதால் சரண் - சாமி ரவி பேட்டி

திருக்காட்டுப்பள்ளி அருகில் கடந்த ஆண்டு நடந்த கல்லணையைச் சேர்ந்த ரவுடி வி எஸ் எல் குமார் ( எ) முருகையன் கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்டுள்ள சாமிரவி இன்று இரவு திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

சரணடைவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் சாமிரவி கூறியதாவது....இந்த வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. இறந்து போனவருடன் மனைவி ஒரு அப்பாவி. அவருக்கு வெளி உலகம் தெரியாது. அவர் யாரோ சொல்லிக் கொடுத்து தான் எனது பெயரில் புகார் கொடுத்துள்ளார்.

காவல்துறையும் எனது மீது வழக்கு பதிவு செய்யவில்லை. அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்துள்ளனர். நான் தொடர்ந்து வழக்குகளில் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகி வருகிறேன். இப்பொழுது தீவிரமாக இருப்பதால் காவல் நிலையத்தில் சரணடைவதாக பிரபல ரவுடி சாமி ரவி காவல் நிலையத்தில் சரணடைவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision