அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கான இடங்களை அமைச்சர் நேரில் ஆய்வு

அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கான இடங்களை அமைச்சர் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகக்கட்டிடம் கட்டுவதற்கான இடங்களையும் மற்றும் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (14.06.2024) ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார்,l வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) பொறி.ரத்தினவேல், இலால்குடி நகர்மன்ற தலைவர் துரைமாணிக்கம், நகராட்சி ஆணையர் குமார், ஒன்றியக்குழு தலைவர் ரவிச்சந்திரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision