திருச்சி பெரியார் கலை அறிவியல் கல்லூரியில் மாநில தேர்தல்

திருச்சி  பெரியார் கலை அறிவியல் கல்லூரியில்  மாநில தேர்தல்

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில தேர்தல் கடந்த (30.07.2023) அன்று திருச்சிராப்பள்ளி தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் முடிந்த பின்னர் வாக்கு  எண்ணிக்கை நடைபெற்றது. அதில் அதிக ஆதரவுடன்  மாநில தலைவராக தற்போதைய திருச்சி மண்டல தலைவரும், அரசு கலை கல்லூரியின் ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியருமான முனைவர் பி டேவிட் லிவிங்ஸ்டன் வெற்றி பெற்றுள்ளார்.

அன்று மாலையே தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்ற மாநிலப் பொது குழுவில் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision