பாஜக தலைவர் நட்டா ரோடு ஷோவிற்க்கு திருச்சி மாநகர காவல் துறை அனுமதி மறுப்பு.

பாஜக தலைவர் நட்டா ரோடு ஷோவிற்க்கு திருச்சி மாநகர காவல் துறை அனுமதி மறுப்பு.

பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் நட்டா இன்று இரவு விமான மூலம் திருச்சி வருகிறார்.நாளை தேனி உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.இந்நிலையில் நாளை திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ரோட் ஷோவுக்கு( நட்டா ரோட் ஷோவில் பங்கேற்க) பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கேட்டனர்.

மாநகர காவல் ஆணையர் காமினி அனுமதி மறுத்துள்ளார். அந்த பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதால் ரோட் ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 கேரளாவிலிந்து இன்று இரவு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து ஓய்வு எடுக்கிறார். நாளை சிதம்பரம் கடலூர் கரூர் விருதுநகர் ஆகிய பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார் மாலை ஐந்து முப்பது மணிக்கு திருச்சி திரும்புகிறார் மீண்டும் திருச்சி விமான நிலையத்திலிருந்து இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision