திருச்சி மாவட்டத்தில் நாளை(09.02.2022) உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

திருச்சி மாவட்டத்தில் நாளை(09.02.2022) உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் க.வைரமனி வெளியிட்டுள்ள அறிக்கை.

நடைபெறவிருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தி.மு. கழகத்தின் சார்பில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நமது தி.மு.கழக இளைஞரணி செயலாளரும், திருவல்லிகேனி-சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நாளை (09,02.2022) புதன் கிழமையன்று மதியம் 1.00 மணியளவில் பெட்டவாய்தலையில் வரவேற்பு நிகழ்ச்சி.

அதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாலை 4.00 மணியளவில் மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு ரோடு அருகிலும், மாலை 5.00 மணியளவில் உறையூர் குறத்தெரு அருகிலும், மாலை 5.30 மணியளவில் மரக்கடை பகுதியிலும், மாலை 6.30 மணியளவில் காட்டூரிலும், இரவு 7.00 மணியளவில் துவாக்குடியிலும், பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதுசமயம் கழக வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும், திருச்சி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள் முன்னாள், இந்நாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள். கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு திருச்சி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn