வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி - திருச்சியில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி -  திருச்சியில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்.

வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்ய வேண்டும், வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி செய்யும் பாஜக அரசை கண்டித்தும் இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்துவதை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், வாக்குச்சீட்டு முறையினை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் இன்று விடுதலை சிறுத்தைகளை கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சென்னையில் விடுதலை சிறுத்தை கட்சியில் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை அருகே மாவட்ட செயலாளர்கள் கனியமுதன், புல்லட் லாரன்ஸ் கலைச்செல்வன்,

குரு அன்புச்செல்வன், சக்தி ஆற்றலரசு ஆகியோர் தலைமையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை ஒருங்கிணைப்பில், திருச்சி - கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி மண்டல துணைச் செயலாளர் பொன்.முருகேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையை புதுவை மாநில விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் புதுவை பாவாணன் வழங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளர் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன்,

மாநில துணைச்செயலாளர் அரசு, மாவட்ட பொருளாளர் சந்தன மொழி மற்றும் நிர்வாகிகள் கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision