Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவானைக்கோயிலில் ஹேர் சலூனில் ஊழியர் மீது போதை நபர் தாக்குதல் – பரபரப்பு

திருச்சி திருவானைக்கோயில் பகுதியில் உள்ள கிங்ஸ் ஹேர் சலூன் கடைக்குள் இன்று காலை சுமார் 11:00 மணி அளவில் புகுந்த போதை நபர் ஒருவர், அங்கிருந்த ஊழியரை திடீரென தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வித காரணமும் இன்றி நடந்த இந்த தாக்குதலில் ஊழியர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போதை நிலையில் சுற்றித்திரியும் இளைஞர்கள் காரணமாக பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து போதை நபர்களை கட்டுப்படுத்த வேண்டும்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *