Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மூதாட்டியிடம் 12 பவுன் தங்க நகைகளை பறித்து சென்ற நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மங்கம்மா நகரில் மே மாதம் 27ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் வாயை பொத்தி அவர் அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றதாக புகார் பெறப்பட்டது.

இந்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில், ஸ்ரீரங்கம் மூலத்தோப்பை சேர்ந்த சரவணன் (27) மற்றும் இருவர் சேர்ந்து இக்குற்ற செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் விசாரணையில், சரவணன் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லையில் 4 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. சரவணன் என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, சரவணன் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள சரவணன் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *