Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மின்வாரிய ஊழியர் வீட்டில் தீடீர் தீ விபத்து லட்சக்கணக்கான மதிப்பு பொருட்கள் நாசம்.

மணப்பாறை கரிக்கான்குளம் விஸ்தரிப்பு பகுதியில் குடியிருந்து வருபவர் பத்மநாபன் (44).இவர் கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த காவல்காரன்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் மின் கம்பி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை அவர் குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக வீட்டை பூட்டிவிட்டு கீழே வந்த போது வீட்டிலிருந்து புகை வருவதாக அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

உடனே பத்பநாபன் மேலே சென்று பார்ப்பதற்குள் தீ மளமளவென்று எரிந்து வீடு முழுவதும் உள்ள பொருட்களை பற்றி கொண்டது. வீட்டில் உள்ளே சென்று பொருட்களை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி தீயை கட்டுப்படுத்தினர். தீயில் சுமார் 1 லட்சம் மதிப்புள்ள டிவி, பிரிட்ஜ் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.திடீர் தீ விபத்தால் குடியிருப்பு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…    https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6sa

#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *