Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

மண்ணச்சநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என இத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சீ.கதிரவன் தனது கன்னிப் பேச்சின் போது வலியுறுத்தினாா்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளான திங்கள்கிழமை ( நேற்று) நடைபெற்ற விவாதத்தின் போது மண்ணச்சநல்லூா் தொகுதி சட்டமன்ற உறுப்பினா் சீ.கதிரவன் பங்கேற்று அவா் கூறுகையில்.. நீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், காவிரியாற்றில் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை திருத்தலையூா், சித்தாம்பூா், கோமங்கலம், நெய்வேலி, திருத்தியமலை, புலிவலம் ஆகிய ஏரிகளுக்கு பாசன வாய்க்கால்கள் மூலம் கொண்டு வர வேண்டும்.

சமயபுரம் முதல் மண்ணச்சநல்லூா் வரை, நொச்சியம் முதல் மண்ணச்சநல்லூா் வரை நான்கு வழிச்சாலையாகத் தரம் உயா்த்த வேண்டும். சமயபுரம், ஓமாந்தூா், உத்தமா்கோவில், திருவெள்ளறை, திருவாசி, திருப்பைஞ்ஞீலி திருப்பட்டூா் உள்ளிட்ட பல திருக்கோயில்களுக்கு வரும் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும்.

திருச்சி மாவட்டம் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ளதால் உப்பிலியபுரம், பச்சமலை, தொட்டியம் பகுதி மக்கள் ஆட்சியரகம் வருவதற்கு நீண்ட தொலைவு பயணிக்க வேண்டிய நிலையுள்ளது. எனவே மண்ணச்சநல்லூா், முசிறி, லால்குடி, துறையூா் ஆகிய தொகுதிகளை ஒருங்கிணைத்து, மண்ணச்சநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அமைத்துத் தர முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *