திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த தாயம்மாள்(75) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுதாகர் (38) என்பவருக்கும் இடையே பந்தல் போடுவதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆத்திரமடைந்த சுதாகர் தண்ணீர் பிடிக்கும் குடத்தை எடுத்து தாயம்மாளின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த தாயம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து சிகிச்சையில் இருந்த தாயம்மாவின் மகன் முருகேசன்(50) அளித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை தாக்கிய சுதாகரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று சுதாகர் சமயபுரம் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் ஆய்வாளருக்கு செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலை அடுத்து காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் சுதாகரை சுற்றி வளைத்தனர்.
போலீசாரை கண்டதும் சுதாகர் அப்பகுதியில் இருந்த காம்பவுண்ட் சுவரை தாண்ட முயற்சித்துள்ளார் எதிர்பாராத விதமாக கீழே விழுந்த சுதாகருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
பின்னர் அவரை கைது செய்து சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவம்னைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சைக்கு பின் சுதாகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments