Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாநகராட்சியில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு 

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையர் சிவசுப்பிரமணியன் தலைமையில் இன்று மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் அரசு உத்தரவின்படி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதேபோல் ஸ்ரீரங்கம், பொன்மலை, அரியமங்கலம் மற்றும் கோ-அபிஷேகம் ஆகிய கோட்டங்களில் உதவி ஆணையர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர பொருளாளர் அமுதவல்லி, உதவி ஆணையர் திருஞானம், சண்முகம், பிரபாகரன் மற்றும் மாநகராட்சி அலுவலக பணியாளர்கள் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *