Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஊனமுற்றோருக்கு மாதாந்திர உதவித்தொகை கூடுதலாக 5,000 வழங்க வேண்டும் – ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கோரிக்கை!!

Advertisement

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில பொது செயலாளர் எஸ்.ஷாஜகான் தலைமையில் மனு கொடுக்கபட்டது இவ்மனுவில்… தமிழக முழுவதும் உள்ள சோதனைச்சாவடிகள், பத்திரப்பதிவு, மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலங்களில் லஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அளவில் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நிரந்தர பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் எனவும், 

Advertisement

உடல் ஊனமுற்றவர்கள் நலம் பெரும் வகையில் 70% விழுக்காடு பாதிக்கபட்ட அவர்களுக்கு மாதாந்திரம் உதவி தொகை கூடுதலாக ரூ 5000 வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமையல் எரிவாயு விலையேற்றத்தால் நடுத்தர குடும்பத்தினர்கள் அதிக பாதிப்புகுள்ளாகி மனஉலைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். ஆகவே மத்திய அரசு சமையல் எரிவாயு விலையேற்றத்தை குறைத்து நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், தமிழகம் முழுவது உள்ள சாலைகளில் ஆடு, மாடு, போன்ற கால்நடைகள் இரவு நேரங்களில் சாலைகளில் உள்ளன. 

https://play.google.com/store/apps/details?id=com.india.thefoodiee

Advertisement

இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளன. ஆகவே கால் நடைகளால் ஏற்படும் விபத்தினை தடுக்கும் வகையில் சாலைகளில் கால் நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் உயிரிழந்தால் கால் நடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பிடு தொகையை உயிரிழப்புக்கு காரணமான கால்நடைகளின் உரிமையாளர்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *